ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்கள் ஃப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அதிரடிச் சலுகை!!
இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் தமது ஃப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு மேலும் சலுகைகளை அறிவித்துள்ளது.
மார்ச் 31 ம் தேதியுடன் வேலிடிட்டி முடிவடைந்த ஃப்ரீபெய்டு வாடிக்கையாளர்களின் சேவை ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஏற்கனவே அறிவித்திருந்தன.
தற்போது ஏப்ரல் 15 வரை வேலிடிட்டி முடிவடையும் அனைத்து ஃப்ரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கும் மே 3ம் தேதி வரை இலவசமாக சேவைகளை பெறலாம் என அதிரடியாக அறிவித்துள்ளது.
இந்த சேவைகள் அனைத்தும் கட்டணம் எதுவும் செலுத்தபடாமலேயே நீட்டிக்கப்படும் என அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த அதிரடி அறிவிப்பால் ஃப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.