கேரளாவில் விமான விபத்து! 14 பேர் பலி!

துபாயிலிருந்து கேரளா மாநிலம் கோழிக்கோடு க்கு வந்து கொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. 14 பயணிகள் பலியாகி உள்ளனர். 124 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. 15 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிகிறது. வந்தே பாரத் சேவைக்காக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை எண்14 IX-1344 துபாயிலிருந்து 190 பயணிகளுடன் கோழிக்கோடு-க்கு வந்து கொண்டிருந்தது. கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுதளத்திலிருந்து கட்டுக்கடங்காமல் தறிகெட்டு ஓடியது. விபத்து குறித்து பிரதமர் மோடி, கேரளா
 

கேரளாவில் விமான விபத்து! 14 பேர் பலி!துபாயிலிருந்து கேரளா மாநிலம் கோழிக்கோடு க்கு வந்து கொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. 14 பயணிகள் பலியாகி உள்ளனர். 124 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. 15 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிகிறது.

வந்தே பாரத் சேவைக்காக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை எண்14  IX-1344 துபாயிலிருந்து 190 பயணிகளுடன் கோழிக்கோடு-க்கு வந்து கொண்டிருந்தது. கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுதளத்திலிருந்து கட்டுக்கடங்காமல் தறிகெட்டு ஓடியது. 

விபத்து குறித்து பிரதமர் மோடி, கேரளா முதல்வர் பினராயி விஜயனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். விமானத் துறை சார்பில் விபத்து குறித்த விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web