நடிகை விஜயலட்சுமி வீடு திரும்பினார்!

‘பிரண்ட்ஸ்’ படம் மூலம் தமிழ் திரைஉலகில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் 2 நாட்களுக்கு முன்பு, தான் வசிக்கும் சென்னை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனது வீட்டில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக அடையாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரிடம் மாஜிஸ்திரேட்டு வாக்குமூலம் பெறப்பட்டு போரூரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை முடிந்து நேற்று மாலை நடிகை விஜயலட்சுமி மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்து நடுரோட்டில்
 

நடிகை விஜயலட்சுமி வீடு திரும்பினார்!பிரண்ட்ஸ்’ படம் மூலம் தமிழ் திரைஉலகில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் 2 நாட்களுக்கு முன்பு, தான் வசிக்கும் சென்னை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனது வீட்டில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக அடையாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரிடம் மாஜிஸ்திரேட்டு வாக்குமூலம் பெறப்பட்டு போரூரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை முடிந்து நேற்று மாலை நடிகை விஜயலட்சுமி மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்து நடுரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

அடையாறிலிருந்து காரணமின்றி போரூக்கு மாற்றப்பட்டேன். எனது தோழி காயத்ரி ரகுராம்தான் சிகிச்சைக்கான பணத்தை செலுத்தியுள்ளார். நான் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அங்கிருந்த போலீசார், அவரை சமாதானம் செய்து வீட்டுக்கு செல்லும்படி அனுப்பி வைத்தனர். தர்ணா காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நீடித்தது.

A1TamilNews.com

From around the web