கோட்டையை நோக்கும் பேட்டையுடன் – பார்த்திபன்
சென்னை : ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் புதிய படம் நடிக்க உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தனது ஒவ்வொரு புதுப்படம் தொடங்கும் முன்பாகவும் வீட்டில் சில நாட்கள் ஓய்வு எடுக்கும் ரஜினி, முக்கிய பிரமுகர்கள், சக திரையுலகினர், நண்பர்களை சந்தித்து பேசுவது வழக்கம்.
நேற்று பூமராங் என்று படக்குழுவினரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதற்கு முன்பு பல்வேறு முக்கிய பிரமுகர்கள் ரஜினியை சந்தித்து பேசினார்.
இன்று நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார். தனது இரண்டாவது மகள் திருமணத்திற்கு அழைப்பதற்காக அவர் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ரஜினியுடன் தான் எடுத்துக்கொண்ட ஒரு செல்ஃபி புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு ‘கோட்டையை நோக்கும் பேட்டையுடன்… இன்று’ என்று பதிவிட்டுள்ளார்.
கோட்டையை நோக்கும் பேட்டையுடன்… இன்று! pic.twitter.com/Wl8EQygWuF
— R.Parthiban (@rparthiepan) March 8, 2019
– வணக்கம் இந்தியா