“ஆரி அருஜுனா”…. யார் இவர் தெரியுமா?

இயக்குனர் சிகரமும் இயக்குனர் இமயமும் இணைந்து நடித்த ரெட்டைச் சுழி மூலம் பரபரப்பாகப் பேசப்பட்டு, நெடுஞ்சாலை படத்தின் வெற்றியால் திரையுலகை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த நடிகர் ஆரி, இனி மேல் ஆரி அருஜுனா என்ற பெயரில் அழைக்கப்படுவார். தன்னுடைய பெயருடன் அருஜுனா என்று சேர்த்துக் கொண்ட நடிகர் ஆரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மதிப்பிற்குரிய பத்திரிக்கை, தொலைக்காட்சி, இணையதள மற்றும் வானொலி நண்பர்களுக்கும் மற்றும் என் நல விரும்பிகளுக்கும் வணக்கம் நான் உங்கள் ஆரி.
 

“ஆரி அருஜுனா”…. யார் இவர் தெரியுமா?யக்குனர் சிகரமும் இயக்குனர் இமயமும் இணைந்து நடித்த ரெட்டைச் சுழி மூலம் பரபரப்பாகப் பேசப்பட்டு, நெடுஞ்சாலை படத்தின் வெற்றியால் திரையுலகை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த நடிகர் ஆரி, இனி மேல் ஆரி அருஜுனா என்ற பெயரில்  அழைக்கப்படுவார்.  

தன்னுடைய பெயருடன் அருஜுனா என்று சேர்த்துக் கொண்ட நடிகர் ஆரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“மதிப்பிற்குரிய பத்திரிக்கை, தொலைக்காட்சி, இணையதள மற்றும் வானொலி நண்பர்களுக்கும் மற்றும் என் நல விரும்பிகளுக்கும் வணக்கம் நான் உங்கள் ஆரி.
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நான் சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் இன்றுவரை பயணிக்கிறேன் அதற்கு காரணம் நீங்கள் என் மேல் வைத்த நம்பிக்கையும் அன்பும் தான், அதை நான் என்றும் மறவேன். இந்த புத்தாண்டு முதல் எனது பெயரை ஆரி அருஜுனா என மாற்றியுள்ளேன்.

“ஆரி அருஜுனா”…. யார் இவர் தெரியுமா?

எனவே இனிவரும் காலங்களில் தாங்கள் என் சம்பந்தமாக செய்தியை வெளியிடும் போதும் என்னை  அழைக்கும் போதும் எனது பெயரை ஆரி அருஜுனா என்றே அழைக்குமாறும் வெளியிடுமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த புத்தாண்டில் உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேற நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். என்றும் உங்கள் அன்பையும், ஆதரவையும் எதிர்பார்க்கும் ஆரி அருஜுனா,” என்று தெரிவித்துள்ளார்.

திரைப்படங்களுடன் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை மூலம் சமுதாயப் பணிகளும் ஆற்றி வரும் ஆரி அருஜுனா நடிப்பில்  “எல்லாம் மேலே இருக்கிறவன் பாத்துப்பான்”, “மௌனவலை”, “அலேகா” ஆகிய மூன்று படங்கள் வரிசையாக வர உள்ளது.

அர்ஜுனா கேள்விப்பட்டிருக்கோம். அதென்ன அருஜூனா? வித்தியாசமா யோசிச்சிருக்காரே!

http://www.vanakamindia.com

From around the web