நம் மண்ணில் மட்டும் தான் தனக்காக சமைக்காத தாய் உண்டு! நடிகர் ஆரி அருஜுனா உருக்கம் !!
நம் மண்ணில் மட்டும் தான் தனக்காக சமைக்காத தாய் உண்டு என்று நடிகர் ஆரி அருஜுனா கூறியுள்ளார்.
அன்னையர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஆரி அருஜுனா. வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது,
“இந்த மண்ணில் யார் இல்லாமல் பிரவேசத்திற்க முடியாதோ, யாரை இழந்து விட்டால் மீண்டும் பெற இயலாதோ அவள் பெயர் தான் தாய் என்று விவேகானந்தர் சொல்லி இருக்கிறார்.
பிள்ளைகளைப் பொறுத்தவரை வீட்டில் விருப்பப்பட்ட உணவு இருந்தால் வீட்டில் சாப்பிடுவோம். அப்பாக்களை பொறுத்தவரையில் உணவு ருசியாக இருந்தால் வீட்டில் சாப்பிடுவார். நம் அம்மாவைப் பொறுத்த வரையில் வீட்டில் மிச்சம் இருந்தால் மட்டுமே உணவை உண்ணுபவள்.
உலகத்திலேயே தனக்காக சொத்து சேர்க்காத அப்பாக்களும் தனக்காக சமைக்காத தாயும் உண்டென்றால் அது நம் மண்ணில் தான். அந்தப் பெருமை எப்பவும் நம்ம இந்தியாவுக்கு உண்டு. தாயை மறவாமல் இருப்போம், தாய்மையை போற்றுவோம், அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார் ஆரி அருஜுனா