சைட் அடிப்பதற்காகவா போராட்டம்? – சர்ச்சை கிளப்பிய ஒய்.ஜி.மகேந்திரனுக்கு குவியும் கண்டனங்கள்!

மாணவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பேசியுள்ளதற்கு கண்டனங்கள் குவிகிறது. சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒய்.ஜி.மகேந்திரன் , “பெண்களை கவர்வதற்காகவும், வகுப்புகளைப் புறக்கணிக்கவுமே மாணவர்களும், இளைஞர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எதற்குமே வன்முறை தீர்வாகாது. அந்த வன்முறையை கையாண்டிருந்தால் காந்தியால் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்திருக்க முடியாது,” என்று கூறியிருந்தார். சமூக நலனுக்காகவும், ஒட்டுமொத்த மக்களின் உரிமைக்காவும் போராடி வரும் மாணவர்களிடையே ஒய்.ஜி.மகேந்திரனின் இந்த பேச்சு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுவரை
 

சைட் அடிப்பதற்காகவா போராட்டம்? – சர்ச்சை கிளப்பிய ஒய்.ஜி.மகேந்திரனுக்கு குவியும் கண்டனங்கள்!மாணவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பேசியுள்ளதற்கு கண்டனங்கள் குவிகிறது.

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒய்.ஜி.மகேந்திரன் , “பெண்களை கவர்வதற்காகவும், வகுப்புகளைப் புறக்கணிக்கவுமே மாணவர்களும், இளைஞர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எதற்குமே வன்முறை தீர்வாகாது. அந்த வன்முறையை கையாண்டிருந்தால் காந்தியால் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்திருக்க முடியாது,” என்று கூறியிருந்தார்.

சமூக நலனுக்காகவும், ஒட்டுமொத்த மக்களின் உரிமைக்காவும் போராடி வரும் மாணவர்களிடையே ஒய்.ஜி.மகேந்திரனின் இந்த பேச்சு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இதுவரை நடந்துள்ள வன்முறைகள் அனைத்தும் ஆட்சியாளர்களாலேயே நடத்தப்பட்டது என ஒய்.ஜி.மகேந்திரன் அறிந்திருக்கவில்லையா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியதோடு அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னை மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அரசு தரப்பில் மின் விளக்குகளை அணைத்த போது, செல்போன்  மூலம் ஓளியேற்றி இளம் பெண்களுக்கு பாதுகாப்பு அரண்களாக இளைஞர்கள் இருந்த போது, அது உலக அளவில் பிரபலமானது குறிப்பிடத் தக்கது.

https://www.A1TamilNews.com

From around the web