அடிமைத்தன ஒழிப்பு தின கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு.. 6 பேர் படுகாயம்.. லைவ் வீடியோ!!

அமெரிக்காவில் நடைபெற்ற அடிமைத்தன ஒழிப்பு தின கொண்டாட்டத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அடிமைகளாக இருந்த ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் விடுதலையை கடந்த 1865-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி மேயர் கார்டான் கிரேஞ்சர் என்பர் பிரகடனம் செய்தார். இதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19-ம் தேதி ‘ஜூண்டீந்த்’ என்ற பெயரில் அடிமைத்தன ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த 2021-ம் ஆண்டு அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு இந்த தினத்தை தேசிய விடுமுறை நாளாக அறிவித்தது. இந்த தினத்தை அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் மக்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டாடி வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த கொண்டாட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.
அந்த வகையில் அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள மில்வாக்கி நகரில் நடைபெற்ற ‘ஜூன்டீன்த்’ அடிமைத்தன ஒழிப்பு தின கொண்டாட்டத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் சிறுவர், சிறுமிகள் உள்பட 6 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் மீது போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து மில்வாக்கி காவல்துறைத் தலைவர் ஜெஃப்ரி நார்மன் கூறுகையில், துப்பாக்கிச் சூடு பல பெண்கள் மற்றும் இளம் பெண்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் இருந்து வந்திருக்கலாம், ஆனால் சர்ச்சையைத் தூண்டியது எது என்று தனக்குத் தெரியவில்லை. காயமடைந்தவர்களின் காயங்கள் வேறுபட்டவை, ஆனால் உயிருக்கு ஆபத்தானதாகத் தெரியவில்லை என்று கூறினார்.