ஆங்கிலம் படிக்க வரல.. ஆசிரியர் திட்டியதால் ப்ளஸ்-1 மாணவி விபரீத முடிவு!! உருக்கமான கடிதம் சிக்கியது

 
kanchipuram

காஞ்சிபுரம் அருகே ஆசிரியை கண்டித்ததால் ப்ளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் புத்தேரி பகுதியில் வசித்து வருபவர் ரஜினிகாந்த். இவர், அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லதா. இவர் தனியார் நகை கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களது முதல் மகள் கல்லூரியிலும், 3வது மகள் 6-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். 2வது மகளான கனிஷியா (17) காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ப்ளஸ்-1 படித்து வந்தார்.

இந்த நிலையில் கனிஷியா ஆங்கில பாடத்தில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் ஆசிரியை கண்டித்ததாக கூறப்படுகிறது. மேலும் பெற்றோரை அழைத்து வரும்படி தெரிவித்தனர். பணிமுடித்து வீட்டுக்கு வந்த லதா, வீடு உள்பக்கம் தாளிட்டிருந்ததால் தட்டி பார்த்தார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினருடன் கதவை திறந்து பாரத்தபோது கனிஷியா மின்விசிறியில் தூக்குப்போட்டது தெரியவந்தது.

Suicide

இதை தொடர்ந்து கனிஷியாவை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு கனிஷியாவின் பெற்றோர்களும் உறவினர்களும் கதறி அழுதனர்.

மாணவி கனிஷியா தற்கொலைகுக முன்னர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது. அதில், “பள்ளியில் ஆசிரியை திட்டி விட்டார்கள். நான் எந்த தவறும் செய்யாமல் இருக்கும்போது எல்லாரும் என்னை திட்டுகிறார்கள். சின்ன, சின்ன விஷயங்களுக்கு திட்டுகின்றனர். தந்தையை அழைத்து வரும்படி ஆசிரியை கூறியுள்ளார். எப்பவும் நாள் நியாயமாக இருந்தாலும் அநியாயம்தான் நடக்கிறது.

கடவுளே இல்லை. எனக்கு ஒரு முறை கூட நல்லது நடக்க வில்லை. தேர்வில் பிட் அடித்தவர்கள் மட்டும்தான் நல்ல மதிப்பெண் எடுக்கிறார்கள். எப்பவும் படித்து எழுதும் எனக்கு ஒரு முறை கூட குட் போட்டதில்லை. ஒரு முறை கூட குட் வாங்கியது இல்லை. லாரி வண்டியின் மீது சைக்கிளை விட முயன்றும் ஒரு முறை கூட என்னால் சாக முடியவில்லை எனக்கு உயிருடன் இருக்க பிடிக்க வில்லை.

Kanchipuram-Taluk-PS

அம்மா... என்னை நல்ல ஆங்கில பள்ளியில் சேர்த்து இருந்தால் எனக்கும் மற்றவர்கள் போல் ஆங்கிலம் வந்திருக்கும் அல்லவா எல்லோர் முன்பும் இது போல் கேட்டு இருப்பார்களா? எனக்கு ஆங்கிலம் வராதா? எனக்கு சத்தியமா வாழ பிடிக்கவில்லை. சின்ன வயதில் இருந்து ஆங்கிலம் வந்து இருந்தால் இவ்வளவு கஷ்டபடாமல் இருந்திருப்பேன். வரவர என்னை எனக்கே பிடிக்கவில்லை. அம்மா என்னை ஏன் ஆங்கில பள்ளியில் சேர்க்கவில்லை. நான் சந்தோஷமாக இல்லை. அக்காள், தங்கை நன்றாக படிக்கிறார்கள். என்னால்தான் படிக்க முடியவில்லை.” என்று எழுதிருந்தார்.

இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ப்ளஸ்-1 மாணவி ஆசிரியர் திட்டியதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web