கனமழை காரணமாக 29 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

 
Leave

கனமழை காரணமாக 29 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழ்நாடு முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. 

leave

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னையில் நேற்றில் இருந்து விட்டு விட்டு நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழை காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .

கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேலூர், நீலகிரி, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Leave

இதேபோல், சேலம், கரூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கோவை, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர், சிவகங்கை, மதுரை, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web