காதல் திருமணம் செய்த புதுப்பெண்... 3 நாட்களிலேயே கிணற்றில் குதித்து தற்கொலை!!

 
dead-body

திருப்பத்தூர் அருகே காதல் திருமணம் செய்த 3 நாட்களிலேயே புதுப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் தாலுகா காக்கணபாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் மகேந்திரன். இவரது மகன் துருவன் (27). கட்டிட மேஸ்திரி. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த பானுப்பிரியா (25) கட்டிடப் பணியில் கூலி வேலை செய்து வந்தார். இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

water

பின்னர் காக்கணபாளையத்தில் கணவன் துருவனுடன் அவரது வீட்டில் பானுப்பிரியா மணவாழ்க்கையை தொடங்கினார். இவர்களுக்கிடையே குடும்ப பிரச்சினையில் திடீரென தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பானுப்பிரியா அருகில் இருந்த காளி என்பவருடைய விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பானுப்பிரியாவின் அலறல் சத்தம் கேட்டு துருவன் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கினர். அவர்கள் 25 அடி ஆழ கிணற்றில் கிடந்த பானுப்பிரியாவின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

Kurisilapet PS

தொடர்ந்து குரிசிலாப்பட்டு போலீசார், பானுப்பிரியா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் ஆகி 3 நாட்ககளே ஆகி உள்ளதால் பானுப்பிரியாவின் தற்கொலை குறித்து சப்- கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது இந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

From around the web