மகிழ்ச்சி! கொரோனாவிலிருந்து குணமடைந்த 99 வயது மூதாட்டி!!

ஒரு புறம் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கைகள் அதிகரித்து வருவது கவலை அளித்துக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது ஆறுதலான சில நிகழ்வுகளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் 99 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவிலிருந்து முற்றிலுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இவருடைய குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த மூதாட்டிக்கு உயர் ரத்த அழுத்தமும் இருந்துள்ள நிலையில் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளார். இது குறித்து பெங்களூர் மருத்துவ கல்லூரி மற்றும் ஆய்வு மையத்தின் மூத்த
 

மகிழ்ச்சி! கொரோனாவிலிருந்து குணமடைந்த 99 வயது மூதாட்டி!!ரு புறம் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கைகள் அதிகரித்து வருவது கவலை அளித்துக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது ஆறுதலான சில நிகழ்வுகளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் 99 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவிலிருந்து முற்றிலுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இவருடைய குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த மூதாட்டிக்கு உயர் ரத்த அழுத்தமும் இருந்துள்ள நிலையில் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளார்.

இது குறித்து பெங்களூர் மருத்துவ கல்லூரி மற்றும் ஆய்வு மையத்தின் மூத்த மருத்துவ அதிகாரி ஸ்மிதா சேகு கூறுகையில், “இந்த 99 வயது மூதாட்டி தான் அதிக வயதுள்ளவர்களில் கொரோனா தொற்று ஏற்பட்டவர். அவர் விரைவாக குணமடைந்து விட்டார். கர்நாடக மாநிலத்தின் கொரோனா சிகிச்சைகளில் இது ஒரு முக்கியமான தடமாகும்,” என்று தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com 

From around the web