ஜம்மு காஷ்மீரில் 80 ஆயிரம் அரசுப் பணியிடங்களுக்கு ஆள் சேர்ப்பு!!
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ம் நாள் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீரில் 80 ஆயிரம் பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை நடவடிக்கைகள் தொடங்கியது. திருத்திய விதிகளின்படி இருப்பிட சான்றிதழ் உள்ள பாகிஸ்தான் அகதிகள், தூய்மை பணியாளர்கள் இந்த வேலைகளுக்குவேலைக்கு விண்ணப்பிக்கலாம். எல்லா நிலைகளிலும் குறிப்பாக 4 ம் நிலை 3 ம் நிலை காலியிடங்களை ஆள் சேர்க்கையை துரிதப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் கிரிஷ் சந்திரா முர்மு தலைமையில் உயர்மட்ட
May 26, 2020, 09:00 IST
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ம் நாள் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீரில் 80 ஆயிரம் பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை நடவடிக்கைகள் தொடங்கியது.
திருத்திய விதிகளின்படி இருப்பிட சான்றிதழ் உள்ள பாகிஸ்தான் அகதிகள், தூய்மை பணியாளர்கள் இந்த வேலைகளுக்குவேலைக்கு விண்ணப்பிக்கலாம். எல்லா நிலைகளிலும் குறிப்பாக 4 ம் நிலை 3 ம் நிலை காலியிடங்களை ஆள் சேர்க்கையை துரிதப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் கிரிஷ் சந்திரா முர்மு தலைமையில் உயர்மட்ட குழு கடந்த வெள்ளியன்று பரிசீலித்தது.
நிலை 4 பணியிடங்களுக்கு ஆள் சேர்க்கையில் கைம்பெண்கள், கைவிடப்பட்ட பெண்கள், விவாகரத்துப்பெற்ற பெண்கள், தனித்து வாழும் தாய்மார்கள், , அரசுப்பணியில் இல்லாதவர் குடும்ப உறுப்பினர்கள் முன்னுரிமை பெறுவார்.
குறிப்பிட்ட பணிக்கு தேர்வு ஆன பிறகு இருப்பிடச் சான்றிதழ் கோரப்படும் என அரசு வட்டாரம் தெரிவித்துள்ளது. காஷ்மீர் பூர்விக இளைஞர்களுக்கும், இருப்பிடச் சான்றிதழ் விதிகளின் திருத்தம் மூலம் பாகிஸ்தான் அகதிகளுக்கும் தலித்துகளுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீரில் அமைதியும் முன்னேற்றமும் ஏற்பட இந்த புதிய 80 ஆயிரம் வேலைவாய்ப்புகளும் உதவியாக இருக்கும் என நம்பலாம்.
– வி.எச்.கே. ஹரிஹரன்