கொரோனா தடுப்பு நடவடிக்கை!! அமெரிக்கா 21 கோடி நிதி உதவி!
சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்து இருப்பதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை தடை செய்வதில் இந்தியாவுக்கு பொருளாதார நிதியாக ரூபாய் 21 கோடி வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தியாவுடன் 64 நாடுகளுக்கு ரூபாய் 13
Mar 28, 2020, 18:15 IST
சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்து இருப்பதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவலை தடை செய்வதில் இந்தியாவுக்கு பொருளாதார நிதியாக ரூபாய் 21 கோடி வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்தியாவுடன் 64 நாடுகளுக்கு ரூபாய் 13 ஆயிரம் கோடி நிதி வழங்கப்படும் எனவும் அமெரிக்கா அறிவித்து இருக்கிறது.