2020 புத்தாண்டு பலன்கள் – துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு…

2020 புத்தாண்டு பலன்கள் முந்தைய ராசிகளுக்கான புத்தாண்டு பலன்கள் 2020 புத்தாண்டு பலன்கள் – மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு… 2020 புத்தாண்டு பலன்கள் – கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு… துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்) இராசிநாதன் சுக்கிரன் புத்தாண்டு பிறக்கும் போது 4மிடத்தில் இருக்கிறது. எனவே இந்த ஆண்டில் எப்படியும் வீடு வாங்கிவிட வேண்டும் எனும் வைராக்கியம் உண்டாகும். அதில் வெற்றியும்
 

2020 புத்தாண்டு பலன்கள்

2020 புத்தாண்டு பலன்கள் –  துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு…

முந்தைய ராசிகளுக்கான புத்தாண்டு பலன்கள்

2020 புத்தாண்டு பலன்கள் – மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு…

2020 புத்தாண்டு பலன்கள் – கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு…

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

இராசிநாதன் சுக்கிரன் புத்தாண்டு பிறக்கும் போது 4மிடத்தில் இருக்கிறது. எனவே இந்த ஆண்டில் எப்படியும் வீடு வாங்கிவிட வேண்டும் எனும் வைராக்கியம் உண்டாகும். அதில் வெற்றியும் கிடைக்கும். தந்தை வழியில் சொத்து வந்து சேரும்.

2, 7க்குரிய  செவ்வாய் 2மிடத்தில் ஆட்சி பெற்று இருப்பதினால் திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். பணவரவு தாராளமாக இருக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் கிடைக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

3, 6க்குரிய குரு 3மிடத்தில் இருப்பதினால் உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும்.  நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நல்ல லாபம் தரும். கடனுதவி கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். 

4, 5க்குரிய சனி 3மிடத்தில் இருப்பதினால் காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். பங்குச் சந்தை லாபம் தரும். பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்க முடியும். பரம்பரை சொத்து கையை விட்டுப் போகும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். கல்வியில் பின் தங்கிய நிலை ஏற்படும்.

9, 12க்குரிய புதன் 3மிடத்தில் இருப்பதினால் அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஆன்மீகப் பிரயாணம் ஏற்படும். ஒப்பந்தக்காரர்களுக்கு புது ஒப்பந்தம் கிடைக்கும். 

11மிடத்து அதிபதி சூரியன் 3மிடத்தில் இருப்பதினால் நண்பர்களின் உதவி கிடைக்கும். ஆசைகள் நிறைவேறும். மூத்த சகோதரரர்களால் நன்மைகள் உண்டாகும். நீண்ட நாட்களாக வரவேண்டிய பணம் வந்து சேரும்.எதிர்பார்த்த தகவல்கள் சாதகமாக வந்து சேரும். பிரயாணம் நன்மை தரும்.

பரிகாரம் : தினசரி அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி பாராயணம் செய்தால் நினைத்தது எல்லாம் பலிதமாகும்.

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்கேட்டை)

இராசிநாதன் செவ்வாய் இராசியிலேயே ஆட்சி பெற்று இருக்கிறது. முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிறிது உடல்நலம் பாதிக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடன் தொல்லை அகலும். எதிரிகள் விலகிச் செல்வர்.

2, 5க்குரிய குரு 2மிடத்திலேயே ஆட்சி பெற்று இருக்கிறது. எனவே பணமழை கொட்டப் போகிறது. குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். பங்குச் சந்தை நல்ல லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். 

3, 4க்குரிய சனி 3மிடத்தில் இருப்பதினால், பிரயாணம் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நல்ல லாபம் தரும். குடும்பத்தில் பாகப்பிரிவினை நடைபெறும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மை கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பயிர்த் தொழில் லாபம் தரும். 

7, 12க்குரிய சுக்கிரன் 3மிடத்தில் இருப்பதினால் திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நன்மை தரும். 

8,11க்குரிய புதன் 2மிடத்தில் இருப்பதினால் உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் லாபப் பங்கு கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். ஆசைகள் நிறைவேறும். 

10மிடத்து அதிபதி சூரியன் 2மிடத்தில் இருப்பதினால் உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். மதிப்பு, செல்வாக்கு உயரும்.

திசாநாதன் ராகு 8மிடத்தில் இருப்பதினால் வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. உடல்நலத்தில் கவனம் தேவை. 

பரிகாரம்: விநாயகப் பெருமானை அருகம்புல் சாத்தி வழிபட பிரச்சினைகள் தானாக விலகும்

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

இராசிநாதன் குரு இராசியிலேயே ஆட்சி பெறுகிறது. இதனால் எல்லா முயற்சிகளிலும் எளிதாக வெற்றி கிடைக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பயிர்த் தொழில் லாபம் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும்.

2, 3க்குரிய சனி இராசியிலேயே இருப்பதினால் பணவரவு தாராளமாக இருக்கும். வங்கியில் நிதிநிலை உயரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நல்ல லாபம் தரும். பிரயாணம் ஏற்படும். குடும்பத்தில் பாகப் பிரிவினை உண்டாகும். 

5,12க்குரிய செவ்வாய் 12மிடத்தில் இருப்பதினால் சினிமா, சங்கீதம் நன்மை தராது. குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும். காதல் விவகாரத்தில் ஊடல்கள் ஏற்படும். பங்குச் சந்தை லாபம் தராது. சில முதலீடுகள் செய்ய நேரிடும். பணவிரயம் உண்டாகும்.

6, 11க்குரிய சுக்கிரன் 2மிடத்தில் இருப்பதினால் வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக தாமதமாகி வந்த பணம் வந்து சேரும். ஆசைகள் நிறைவேறும். 

7,10க்குரிய புதன் இராசியிலேயே  இருப்பதினால் திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டுத் தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய பதவிகள் தேடிவரும். 

9மிடத்து அதிபதியான சூரியன் இராசியிலேயே இருப்பதினால் அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆராய்ச்சியில் வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். 

திசாநாதன் இராகு 7மிடத்தில் இருப்பதினால் நன்மையான பலன்களைத் தரும். புத்திநாதன் செவ்வாய் விரய ஸ்தானத்தில் இருப்பதினால் விரயத்தைத் தரும். 

பரிகாரம்: திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானை தரிசித்து வர நன்மையான பலன்கள் நடக்கும். 

2020 புத்தாண்டு பலன்கள் –  துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு…

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com

மகரம், கும்பம், மீன ராசிகளுக்கான பலன்கள் நாளை தொடரும்..

 

From around the web