2019-20ம் ஆண்டுக்கான குருபெயர்ச்சி பலன்கள்…மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு!

குருபெயர்ச்சி பலன்கள் ( 4-11-2019 முதல் 20-11-2020) மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்) இது வரை லாபஸ்தானமாகிய 11மிடத்தில் சஞ்சரித்து வந்த குரு இப்போது 12மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. எனவே இடமாற்றம் உண்டாகும். முதலீடுகள் செய்ய நேரிடும். முதலீடுகளிலிருந்து வருமானம் வராது. வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். சுபச்செலவு செய்ய நேரிடும். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. எடிட்டிங், எழுத்துத் தொழில்,
 

குருபெயர்ச்சி பலன்கள் ( 4-11-2019 முதல் 20-11-2020)

2019-20ம் ஆண்டுக்கான குருபெயர்ச்சி பலன்கள்…மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு!மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

இது வரை லாபஸ்தானமாகிய 11மிடத்தில் சஞ்சரித்து வந்த குரு இப்போது 12மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. எனவே இடமாற்றம் உண்டாகும். முதலீடுகள் செய்ய நேரிடும். முதலீடுகளிலிருந்து வருமானம் வராது. வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். சுபச்செலவு செய்ய நேரிடும். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். 

நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தராது. பிரயாணங்கள் நன்மை தராது. மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும்.

குருவின் பார்வை பலன்கள்

குரு தனது 5ம் பார்வையால் 4ம் வீட்டைப் பார்க்கிறது. இதனால் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வீடு, நிலம் , வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நிலபுலன்களில் வருமானம் கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயாரினால் நன்மை உண்டாகும்.

குரு தனது 7ம் பார்வையால் 6ம் வீட்டைப் பார்க்கிறது. எனவே வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும்.

குரு தனது 9ம் பார்வையால் 8ம் வீட்டைப் பார்ப்பதினால், அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படாது. மனக்கவலை அதிகரித்து காணப்படும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். விபத்துகள், அறுவை சிகிச்சை போன்றவைகளுக்கு வாய்ப்பு இருப்பதினால் கவனம் தேவை. உழைக்காத பணம் வந்து சேரும். இன்சுரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். ரேஸ், லாட்டரி மூலம் பணவரவு உண்டாகும்.

குரு சஞ்சரிக்கும் சாரப்பலன்கள்

குரு 4-1-2020 வரை கேதுவின் நட்சத்திரமான மூலத்தில் சஞ்சரிக்கிறது. கேதுவுக்கு சொந்த வீடு இல்லாமையால், எந்த வீட்டில் ஜாதகத்தில் இருக்கிறதோ, அதன் பயனைத் தரும். பொதுவாக ஜாதகத்தில் கேது, 1, 2, 3, 6,10, 11 வீடுகளில் இருந்தால் நன்மையான பலன்களைத் தரும்.

குரு சுக்கிரனுடைய பூராட நட்சத்திரத்தில் 7-3-2020 வரையிலும் அதன்பின் 20-7-2020 லிருந்து 30-10-2020 வரையிலும் சஞ்சரிக்கிறது. இந்த காலக்கட்டத்தில் சுக்கிரன் 5,10 வீடுகளுக்கு அதிபதி. ஆகையினால் உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய  பதவிகள் தேடிவரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குச் சந்தை லாபமாக நடைபெறும். சினிமா, சங்கீதத்தில் பெயர், புகழ் கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும்.

குரு சூரியனுடைய நட்சத்திரமான உத்திராடத்தில் 29-3-2020 வரையிலும் அதன்பின் 30-10-2020லிருந்து 20-11-2020 வரையும் சஞ்சரிக்கிறது. இந்த காலக்கட்டத்தில் கவலைகள் மிகுந்து காணப்படும். காரியத் தடை உண்டாகும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும்.

குருவின் வக்ர கதியின் பலன்கள்

குரு 15-5-2020 முதல் 30-6-2020 வரையில் மகர ராசியில் வக்ர கதியில் இருக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் இடமாற்றம் உண்டாகும். பிரயாணம் நன்மை தராது. பணவிரயம் உண்டாகும். மறைமுக எதிரிகளால் தொல்லைகள் உண்டாகும். 

குரு 30-6-2020 முதல் 14-9-2020 வரை தனுசு ராசியில் வக்ர கதியில் இருக்கிறது. இந்த சமயத்தில் முதலீடுகள் லாபம் தரும். பிரயாணம் நன்மை தரும். குடும்பத்தில் பாகப்பிரிவினை உண்டாகும். வீடு, வாகனம், நிலம் விற்று பணம் கிடைக்கும். 

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள்விளக்கு ஏற்றி வந்தால் சங்கடங்கள் தீர்ந்து நன்மை விழையும். 

கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூராட்டாதி 1, 2, 3ம் பாதம்) 

இது வரை 10மிடத்தில் சஞ்சரித்து வந்த குரு இப்போது லாபஸ்தானமாகிய 11மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. குரு 2 மற்றும் 11ம் வீடுகளுக்கு அதிபதி ஆகையால் பல வகைகளில் பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். 

நிதிநிலை உயரும். ஆசைகள் நிறைவேறும். உறவினர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். மூத்த சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். 

குருவின் பார்வை பலன்கள்

குரு தனது 5ம் பார்வையால் 3ம் வீட்டைப் பார்க்கிறது. இதனால் இடமாற்றம் நன்மையாக அமையும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். ரேஸ், லாட்டரி நல்ல லாபம் தரும். இளைய சகோதரர்களினால் நன்மை கிடைக்கும்.

குரு தனது 7ம் பார்வையால் 5ம் வீட்டைப் பார்க்கிறது. எனவே காதல் திருமணம் நடைபெறும். சினிமா, சங்கீதம் லாபம் தரும். பங்குச் சந்தை நல்ல பலன் கொடுக்கும். கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். கேளிக்கைகள் நிறைந்து காணப்படும். குழந்தைகளினால் நன்மை கிடைக்கும். 

குரு தனது 9ம் பார்வையால் 7ம் வீட்டைப் பார்ப்பதினால் திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டு வியாபாரம் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். பிரயாணம் ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகள் காணப்பட்டாலும் நல்ல லாபம் தரும். சில முக்கியமான சந்திப்புகளுக்கு வாய்ப்பு உண்டு.

குரு சஞ்சரிக்கும் சாரப்பலன்கள்

குரு 4-1-2020 வரை கேதுவின் நட்சத்திரமான மூலத்தில் சஞ்சரிக்கிறது. கேதுவுக்கு சொந்த வீடு இல்லாமையால், எந்த வீட்டில் ஜாதகத்தில் இருக்கிறதோ, அதன் பயனைத் தரும். பொதுவாக ஜாதகத்தில் கேது, 1, 2, 3, 6,10, 11 வீடுகளில் இருந்தால் நன்மையான பலன்களைத் தரும்.

குரு சுக்கிரனுடைய பூராட நட்சத்திரத்தில் 7-3-2020 வரையிலும் அதன்பின் 20-7-2020 லிருந்து 30-10-2020 வரையிலும் சஞ்சரிக்கிறது. சுக்கிரன் கும்ப ராசிக்கு 4ம் வீடு மற்றும் 9ம் வீட்டின் அதிபதியாவதினால் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஆராய்ச்சியாளர்களுக்கு ஆராய்ச்சியில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நல்ல லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

குரு சூரியனுடைய நட்சத்திரமான உத்திராடத்தில் 29-3-2020 வரையிலும் அதன்பின் 30-10-2020 முதல் 2-11-2020 வரையிலும் சஞ்சரிக்கிறது. இதனால், தடைபட்டு நின்றிருந்த திருமணம் நடைபெறும். கூட்டு வியாபாரம் ஆரம்பிக்க முடியும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். 

குருவின் வக்ர கதியின் பலன்கள்

குரு 15-5-2020 முதல் 30-6-2020 வரையில் மகர ராசியில் வக்ர கதியில் இருக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் பண விரயம் உண்டாகும். நண்பர்களிடையேயும் உறவினர்களிடையேயும் பிரிவினை உண்டாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். 

குரு 30-6-2020 முதல் 14-9-2020 வரை தனுசு ராசியில் வக்ர கதியில் இருக்கிறது.இந்த காலக்கட்டத்தில் எதிர்பாராத பணவரவு உண்டாகும். புதிய நண்பர்கள் வரவு மகிழ்ச்சியைத் தரும். உறவினர்கள் ஓடோடி வந்து உதவுவர். நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். 

பரிகாரம்: திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்து வந்தால் துன்பங்கள் விலகும்.

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

இதுவரை 9மிடமாகிய பாக்கியஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் குரு இப்போது 10மிடமாகிய க்ர்மஸ்தானத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. இதனால் பெயர், புகழ் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். 

புதிய பதவிகள் தேடிவரும். தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் லாபகரமாக நடைபெறும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

குருவின் பார்வை பலன்கள்

குரு தனது 5ம் பார்வையால் 2ம் வீட்டை பார்க்கிறது. இதனால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். நிதிநிலை உயரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். 

குரு தனது 7ம் பார்வையில் 4ம் வீட்டைப் பார்க்கிறது. இதனால் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். பயிர்த் தொழில் நல்ல பலனைத் தரும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள்.

குரு தனது 9ம் பார்வையால் 6ம் வீட்டைப் பார்க்கிறது. எனவே., வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். எதிரிகள் காணாமல் போவார்கள். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். 

குரு சஞ்சரிக்கும் சாரப்பலன்கள்

குரு 4-1-2020 வரை கேதுவின் நட்சத்திரமான மூலத்தில் சஞ்சரிக்கிறது. கேதுவுக்கு சொந்த வீடு இல்லாமையால், எந்த வீட்டில் ஜாதகத்தில் இருக்கிறதோ, அதன் பயனைத் தரும். பொதுவாக ஜாதகத்தில் கேது, 1, 2, 3, 6,10, 11 வீடுகளில் இருந்தால் நன்மையான பலன்களைத் தரும்.

குரு சுக்கிரனுடைய பூராட நட்சத்திரத்தில் 7-3-2020 வரையிலும் அதன்பின் 20-7-2020 லிருந்து 30-10-2020 வரையிலும் சஞ்சரிக்கிறது. இதனால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். சினிமா, சங்கீதத்தில் பெயர் புகழ் கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். குழந்தைகளினால் நன்மை கிடைக்கும்.

குரு சூரியனுடைய நட்சத்திரமான உத்திராடத்தில் 29-3-2020 வரையிலும் அதன்பின் 30-10-2020 முதல் 2-11-2020 வரையிலும் சஞ்சரிக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். 

குருவின் வக்ர கதியின் பலன்கள்

குரு 15-5-2020 முதல் 30-6-2020 வரையில் மகர ராசியில் வக்ர கதியில் இருக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் வளமாக நடைபெறும். பதவிகள் தேடிவரும்.

குரு 30-6-2020 முதல் 14-9-2020 வரை தனுசு ராசியில் வக்ர கதியில் இருக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். 

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் தட்சிணா மூர்த்தியை வழிபட நன்மைகள் தேடிவரும்.

முந்தைய ராசிகளுக்கான பலன்கள்:

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கான குருபெயர்ச்சி பலன்கள்

 
 
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 

 

From around the web