ஒரு ராணுவ வீரருக்குப் பதில் 10 எதிரிகள் கொல்லப்படுவர்- அமித்ஷா எச்சரிக்கை!

மும்பை: ஓரு ராணுவ வீரர் கொல்லப்பட்டால் அதற்கு பதிலடியாக 10 எதிரிகள் கொல்லப்படுவர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எச்சரித்துள்ளார். மாகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அவர், 370ஆவது சட்டப்பிரிவை நீக்கி, பிரதமர் மோடி பெரும் பணியை முடித்திருப்பதாகக் கூறினார். ஆனால் காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் இதனை எதிர்ப்பதாகத் தெரிவித்த அமித் ஷா, காஷ்மீர் விவகாரத்தில் இவ்விரு கட்சிகளும் தங்கள் நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தினார். நம் ராணுவத்தைச் சேர்ந்த ஒரு
 

ஒரு ராணுவ வீரருக்குப் பதில் 10 எதிரிகள் கொல்லப்படுவர்- அமித்ஷா எச்சரிக்கை!

மும்பை: ஓரு ராணுவ வீரர் கொல்லப்பட்டால் அதற்கு பதிலடியாக 10 எதிரிகள் கொல்லப்படுவர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எச்சரித்துள்ளார்.

மாகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அவர், 370ஆவது சட்டப்பிரிவை நீக்கி, பிரதமர் மோடி பெரும் பணியை முடித்திருப்பதாகக் கூறினார்.

ஆனால் காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் இதனை எதிர்ப்பதாகத் தெரிவித்த அமித் ஷா, காஷ்மீர் விவகாரத்தில் இவ்விரு கட்சிகளும் தங்கள் நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

நம் ராணுவத்தைச் சேர்ந்த ஒரு வீரர் உயிரிழந்தால், அதற்கு பதிலடியாக 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள் என்பதை தற்போது உலமே அறிந்திருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

-வணக்கம் இந்தியா

From around the web