10 ஜிபி டேட்டா இலவசம்! செல்போன் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!!

தொலைத் தொடர்பு நிறுவனங்களில் மிகக் குறைந்த காலத்திலேயே அதிக வாடிக்கையாளர்களை பெற்றிருக்கும் நிறுவனங்களில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தில் இருக்கிறது. வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க அவ்வப்போது அதிரடி திட்டங்களை ஜியோ வெளியிடுவது வழக்கம். லாக்டவுன் காலத்திலும் கூடுதல் டேட்டாவைப் பெற பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போதுதேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டாவினை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. இதன்படி ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை இலவசமாகப் பெறமுடியும் என அந்நிறுவனம்
 

10 ஜிபி  டேட்டா இலவசம்!  செல்போன் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!!தொலைத் தொடர்பு நிறுவனங்களில் மிகக் குறைந்த காலத்திலேயே அதிக வாடிக்கையாளர்களை பெற்றிருக்கும் நிறுவனங்களில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தில் இருக்கிறது.

வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க அவ்வப்போது அதிரடி திட்டங்களை ஜியோ வெளியிடுவது வழக்கம். லாக்டவுன் காலத்திலும் கூடுதல் டேட்டாவைப் பெற பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போதுதேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டாவினை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. இதன்படி ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை இலவசமாகப் பெறமுடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இதே சலுகை அறிவிக்கபட்டிருந்தாலும் இப்போது இன்னும் மேம்படுத்தப்பட்ட வகையில் வழங்கப்படும். இந்தப் புதிய சலுகையில் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக 10 ஜிபி வரை கூடுதல் டேட்டா இலவசமாக வழங்கப்படும்.

தினசரி திட்டத்தின் டேட்டா முடிவடைந்தவுடன் கூடுதல் டேட்டாவின் சேவை தொடர்ந்து அளிக்கப்படும். இதை குறுந்தகவல் மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.

வாடிக்கையாளர்கள் தமது எண்ணுக்கு இலவச டேட்டா சேவை அளிக்கப்படுவதை உறுதி செய்து கொள்ள மைஜியோ செயலியில் மை பிளான்ஸ் பகுதியின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

A1TamilNews.com

From around the web