சென்னை கோட்டையில் நாளை சுதந்திர தின விழா! நேரில் பார்வையிடத் தடை!
நாளை இந்தியாவின் 74 வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடி ஏற்றுகிறார். சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வுகளை நேரில் கண்டுகளிக்க வர வேண்டாம் என பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ”இந்தியாவின் 74-வது சுதந்திர திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தலைமைச்செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 15-ந்தேதி(நாளை) காலை 8.45 மணிக்கு தேசியக்கொடியை ஏற்றி சிறப்பிப்பார்.
Aug 14, 2020, 07:30 IST
நாளை இந்தியாவின் 74 வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடி ஏற்றுகிறார்.
சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வுகளை நேரில் கண்டுகளிக்க வர வேண்டாம் என பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
”இந்தியாவின் 74-வது சுதந்திர திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தலைமைச்செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 15-ந்தேதி(நாளை) காலை 8.45 மணிக்கு தேசியக்கொடியை ஏற்றி சிறப்பிப்பார்.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின நிகழ்ச்சியில் சுதந்திரபோராட்ட தியாகிகளும், பொதுமக்களும், மாணவர்களும், பள்ளிக்குழந்தைகளும் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளிக்குழந்தைகள், கல்லூரி மாணவர் கள் மற்றும் மூத்த குடிமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது.
சுதந்திர போராட்ட தியாகிகளின் வயது மூப்பை கருத்தில் கொண்டும், கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும் விதமாகவும், மாவட்டந்தோறும் 10 சுதந்திர போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொது சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பொன்னாடை போர்த்தி உரிய மரியாதை செலுத்த மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு ஆண்டும், சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தலைமை செயலக வளாகத்தில், இனிப்பு பெட்டகம் வழங்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சரின் சார்பாக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்கியுள்ள விடுதிக்கு நேரில் சென்று, சமூக இடைவெளியை பின்பற்றி இனிப்பு பெட்டகத்தை மாணவர்களுக்கு வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்களப்பணியாளர்களை சிறப்பிக்கும் விதமாக, அவர்களுக்கு முதல்-அமைச்சர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்க உள்ளார்.
சுதந்திர தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா நோய் தொற்றை தவிர்க்கும் விதமாக இந்தாண்டு, பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகள் விழாவைக்காண நேரில் வரவேண்டாம்.
சுதந்திர தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி அல்லது வானொலியில் கண்டும், கேட்டும் மகிழுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், “ என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.